Pages

Ads 468x60px

Monday, September 24, 2012

Monday, September 17, 2012

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது. 
  
 

அழுக்குச்சித்தர்  என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை  உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள்  அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார்.  இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி  அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும்  கோவில்கள்  ஆகும். 
அடுத்து வரப்போகும் பதிவுகளில்  அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஜீவசமாதி பற்றிய படங்களும்,விவரங்களும் வெளியிடப்படும்.

ஷீரடி சாய்பாபாவின்  பக்தரின் அனுபவம்



முகப்பு தோற்றம் 

உள்ளே செல்லும் வழி 


அழுக்கு சுவாமிகளின் சீடரான அப்பாபைத்தியம்  சுவாமி
இக்கோவிலில் உள்ள  அப்பாபைத்தியம்  சுவாமி
மேலும் அப்பாபைத்தியம்  சுவாமி பற்றி தெரிந்து  கொள்ள 

செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகள் 












Thursday, September 13, 2012

ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி

ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி 

 ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி பொள்ளாச்சியில் உள்ள புரவிபாளையம் என்னும் ஊரில் ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.


இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,பெரும்பாலான நேரங்களில் வடதிசை நோக்கி இடது காலை பூமியில் ஊன்றி வலது காலை இடது தொடை மீது வைத்து தவம் செய்துகொண்டு  இருப்பார்.இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.இவரை ரயில்வே காவல் துறையில் இருந்த சீரடி சாய்பாபாவின் பக்தரான வரதராஜு அவர்கள் அடையாளம் கண்டு இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.( ஆண்டு 1940-41 ). இறுதியாக  புரவிபாளையம் வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.




























மேலும் விவரங்கள் அறிய கோடிசாமியின் சீடரான வங்வங் கோடிதாசன் அவர்கள் எழுதிய " ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் வருகையும் மகிமையும்" புத்தகத்தை படிக்கவும்.


செல்லும் வழி... 




























ஜமீன் செல்லும் வழி... 
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 30 வது கிலோமீட்டரில் வலதுபுறம் செல்லும் சாலையில் (வடக்கிபாளையம் பிரிவு) சுமார் 18 வது கிலோமீட்டர் சென்றவுடன் புரவிபாளையம் என்ற சிற்றூரில்  ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. மாதத்தில் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Tuesday, September 11, 2012

மூன்றாம் கண்

ஆன்மீக உண்மைகள் -  பகுதி 4


பகுதி-1 பார்க்க

பகுதி-2 பார்க்க

பகுதி-3 பார்க்க


நம் உடலில் பிரபஞ்சசக்தியின் நிறைவால் விழிக்கும் மூன்றாம் கண் 

அடுத்த பதிவு 

சூட்சும உடலும், சூட்சும பயணமும் 

Wednesday, September 5, 2012

பிரமிடில் - பிரபஞ்ச சக்தி

ஆன்மீக உண்மைகள் -  பகுதி 3



பிரமிடில் கிடைக்கும் மூன்று மடங்கு அதிகப்படியான பிரபஞ்ச சக்தி


அடுத்த பதிவு 

நம் உடலில் பிரபஞ்சசக்தியின் நிறைவால் விழிக்கும் மூன்றாம் கண்