ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி
ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி பொள்ளாச்சியில் உள்ள புரவிபாளையம் என்னும் ஊரில் ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.
இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,பெரும்பாலான நேரங்களில் வடதிசை நோக்கி இடது காலை பூமியில் ஊன்றி வலது காலை இடது தொடை மீது வைத்து தவம் செய்துகொண்டு இருப்பார்.இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.இவரை ரயில்வே காவல் துறையில் இருந்த சீரடி சாய்பாபாவின் பக்தரான வரதராஜு அவர்கள் அடையாளம் கண்டு இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.( ஆண்டு 1940-41 ). இறுதியாக
புரவிபாளையம் வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
மேலும் விவரங்கள் அறிய கோடிசாமியின் சீடரான வங்வங் கோடிதாசன் அவர்கள் எழுதிய " ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் வருகையும் மகிமையும்" புத்தகத்தை படிக்கவும்.
 |
| செல்லும் வழி...
|
 |
| ஜமீன் செல்லும் வழி...
|
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 30 வது கிலோமீட்டரில் வலதுபுறம் செல்லும் சாலையில் (வடக்கிபாளையம் பிரிவு) சுமார் 18 வது கிலோமீட்டர் சென்றவுடன் புரவிபாளையம் என்ற சிற்றூரில் ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது. மாதத்தில் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.