Pages

Ads 468x60px

Monday, March 18, 2013

பயணித்ததை உங்களுடன் - மணிகர்ணிகா

மணிகர்ணிகா படித்துறை

மணிகர்ணிகா கட்டம் முக்கிய படித்துறை. ஆதிசங்கரர்  எழுதிய மணிகர்னிகாஷ்டகத்தில் மணிகர்ணிகா கட்டம் பற்றி மிகச் சிறப்பாக கூறியுள்ளார்.ஆகையால் இங்கு சிறுதானங்கள் செய்வது மேன்மையை தரும். அவற்றின் பலன் பல மடங்கு உயரும் என்றும் கூறுவார்கள். ஆகையால் ஏராளமான யாத்திரியர்கள் இங்கே அன்னதானம் முதல் கோதானம் வரையில் செய்வதுண்டு. கங்கையில் நீராடி காரியங்களை செய்பவர்கள் பிறர்மீது படாமல் மடியாக இருப்பதில்லை. யார் மீது யாரும் படலாம். படகோட்டி, பசுமாட்டை அழைத்து வருபவர், பண்டா யார் பட்டாலும், புனிதம் குறைவதில்லை. அனைவரும் ஒன்றே என்ற தத்துவத்தை  இங்கே நிதர்சனமாக காண்கின்றோம். காசியில் இக்காரியங்களை செய்ய வருபவர்களுக்கு உதவ பல தென்னிந்திய புரோகிதர்கள் உள்ளனர். சங்கரமடம், குமரகுருபரர் மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உள்ளன. எந்தவொரு உயிரினமும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம். ஆகையால் ஏராளமான மக்கள் காசியிலே இறந்துவிட தங்கள் கடைசி காலத்தை இங்கேயே கழிக்கின்றனர்.



இப்படித்துறையில் ராமகிருஷ்ணபரமஹம்சர் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். "" மணிகர்ணிகா கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. வெண்ணிற ஜடாமுடியுடன் அங்கு வந்த சிவபெருமான் தாரகமந்திரத்தை இறந்தவர்களின் காதில் ஓதினார். மறுபுறம் கருணையுடன் ஜகன்மாதாவும் உயிர்களைப் பிணித்திருக்கும் தளைகளை நீக்கி அருளினாள். பாக்கியம் பெற்ற அவ்வுயிர்கள் மோட்சகதியை அடைந்தன,'' என்று தன் அனுபவத்தைக் கூறினார்.

உடல்களை எரிப்பதனால் ஏற்பட்ட புகையால், புகைபடிந்துள்ள கட்டிடம் 


கோவிலின் முன் உள்ள இந்த இடத்தில் இருக்கும்  அக்னியை கொண்டே இங்கு எடுத்துவரப்படும் அனைத்து உடல்களும் தீ மூட்ட படுகின்றது.


இங்கு தீ விழுங்கிக்கொண்டிருக்கும் உடலின் நிலமைதான் இந்த உடலுக்குமா ?
ஆனால் இந்த உடலுக்காகத்தானே வாழ்க்கையின் அதிக காலத்தை செலவழிகிறோம்,இந்த உடலை நான் என்று நினைத்ததால் தானே போட்டி , பொறாமை ,பேராசை ,கோபம் ,காமம் போன்ற குணங்கள் தோன்றியது.இந்த குணங்களால் தானே வாழ்க்கையில் அனைத்து நிம்மதியும் இழந்து தவிக்கிறோம் என்ற எண்ணத்தில் பார்த்துக்கொண்டு உள்ளாரோ ?

இந்த உடலுக்குள் என்ன இருந்தது அன்று என்ன இல்லை இன்று.
நாம் நம் வாழ்க்கையில் அன்று இருந்த அந்த ஒன்றிற்கு முக்கியத்துவம் 
கொடுக்கின்றோமா ?
அல்லது சாம்பலாகும் இந்த உடலிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா ?

சிவவாக்கியர் பாடல் 
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.




திருமூலரால் எழுதப்பட்ட பாடலின் ஒரு சிறு பகுதி 
திருமந்திரம்

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.

உடம்பினை  வளர்தேன்  உயிர் வளர்த்தேனே !!!!!


கடுவெளி சித்தர் பாட்டு 

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

விளக்கம் : மனித உயிர் ( ஜீவன் ) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது.இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (4+6=10) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்).

அதுபோல் அல்லாமல்  நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும் வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.

10 comments:

  1. Wonderful and truthful Message. Thanks a lot...

    ReplyDelete
  2. “கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
    வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
    கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
    எட்டி அடிவைப்பரோ?”

    “எரி எனக்கென்னும் – இந்த மண்ணும்
    சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
    நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
    பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?...

    மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
    இனமான சுற்றம் மயானம் மட்டே-வழிக்கேது துணை?
    தினாயாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்தவம்
    தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே”

    “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அம்பொழுக
    மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
    கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
    பற்றித் தொடரும் இருவினைப் புணிணிய பாவமுமே”


    “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”
    -பட்டினத்தார்

    மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
    திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
    விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
    எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

    பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
    உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
    மண்டி அவருடன் வழிநட வாதே.

    ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    போ஢னை நீக்கிப் பிணமென்று போ஢ட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே

    பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
    ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
    துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
    அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

    நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
    காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
    நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
    நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

    முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
    செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
    செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
    ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

    ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
    ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
    வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
    நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே

    -திருமூலர்

    கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
    பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு
    உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
    டொண்டொண்டொ டென்னும் பறை.

    புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
    இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
    நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
    சென்றான் எனப்படுத லால்.

    -நாலடியார்

    இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
    மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்?

    - பத்திரகிரியார்

    ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
    மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
    மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
    ஊற்றைச் சடலம்விட்டே என்கண்ணம்மா
    ஊன்பாதஞ் சேரேனோ

    -அழுகுணிச் சித்தர்



    ReplyDelete
  3. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே...

    -திருமூலர்

    ReplyDelete
  4. thanks for the examples told by great saints.

    ReplyDelete
  5. எதுவும் நிரந்தரமில்லை.ஐயனே நின் பாதம் சரணடைந்தேன்.

    ReplyDelete
  6. Exactly You Got, What was in my mind. Simply You are a Siddhar.

    ReplyDelete
    Replies
    1. welcome ji.. is it !!!!. are you thinking like that in that time.(இங்கு தீ விழுங்கிக்கொண்டிருக்கும் உடலின் நிலமைதான் இந்த உடலுக்குமா ? etc...)
      Glad to hear.
      You watched very closely how body burned.[in the 6th photo]

      Delete
  7. Arumai photos n sidhar padalkal....

    ReplyDelete
  8. "aliyappokum sadalaththai sumanthu kondu" athu venum ithu venum enru alainthu kondirukkum pathaiyil naan paarththa photos veru enna solvathu arumai,thanks...

    ReplyDelete