Pages

Ads 468x60px

Tuesday, August 27, 2013

பயனுள்ள நூல்கள் - பகுதி 2

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் நூல்களில், படிப்பதன் மூலம் படிப்பவரின் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நான் கருதும்படியான, படித்த, உணர்ந்த சில நூல்களை "பயனுள்ள நூல்கள்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.

நூலின் பெயர்   -     பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
நூலின் விலை  -     ரூ.100/-
நூலின் ஆசிரியர்    -  என்.கணேசன்
நூல் வாங்க தொடர்பு கொள்ள    -   9600123146
ஆசிரியரின் இணையதளம்  -   http://enganeshan.blogspot.in/
நூலின் Facebook Page
Facebook Fan group Page   -    https://www.facebook.com/groups/nganeshanfans/
Publisher   -    http://blackholemedia.in/



-------------------------------------------------------------------------------------------------------------------------
நூலைப்பற்றி நூலாசிரியர் என்.கணேசன் : 

எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம். மிகப் பழைமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மிகத் தேடல்களிலும் பண்டைக் காலம் முதலே சிறந்து விளங்கியது. இன்றும் எகிப்தின் ஸ்பிங்க்ஸ்”ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மிக ரகசியங்களைத் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்தச் செல்வங்களைச் சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மிக ரகசியங்கள் பிரமிடுகளில் இன்னும் ஏராளமாக உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. 
இந்நூலில் வரும் சம்பவங்களும், அனுபவங்களும் எழுத்தாளர் பால் ப்ரண்டனுடையதே என்றாலும், இது மொழி பெயர்ப்பு நூல் அல்ல. அவரது பயண அனுபவங்களில் சுவாரசியமானவற்றையும், தேவையானவற்றையும் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளேன். அதே போல சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் விளக்காமல் விட்ட சிலவற்றைத் 
தேவை கருதி நான் விளக்கியும் விவரித்தும் இருக்கிறேன்.
                                                                                                                                                      
நூல் குறித்து தினத்தந்தி (31.10.2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்து மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களை பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்களுடன் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன.மாலை நேரத்துக்குப்பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு நேரத்தில் பிரமிடுக்குள் தங்கினார். அங்கு கெட்ட ஆவிகளும், நல்ல ஆவிகளும் அலைந்து திரிவதை உணர்ந்தார். மேலும் பல அதிசய அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. இதுபற்றி என்.கணேசன் எழுதிய இந்த நூல், நமக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. படிக்க வேண்டிய புத்தகம்.
                                                                                                                                                      

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in , blackholemedia@gmail.com மின்னஞ்சல்கள் மூலமாகவோ, செல்பேசி: 9600123146, மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 
                                                                                                                                                          

Saturday, August 24, 2013

பயனுள்ள நூல்கள் - பகுதி 1

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் நூல்களில், படிப்பதன் மூலம் படிப்பவரின் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நான் கருதும்படியான, படித்த, உணர்ந்த சில நூல்களை "பயனுள்ள நூல்கள்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத,மாபெரும் ஆழ்மனசக்தியை அறிந்திட...

நூலின் பெயர்   -     ஆழ்மனதின் அற்புத சக்திகள்
நூலின் விலை  -     ரூ.200/-
நூலின் ஆசிரியர்    -  என்.கணேசன்
நூல் வாங்க தொடர்பு கொள்ள    -   9600123146
ஆசிரியரின் இணையதளம்  -   http://enganeshan.blogspot.in/
நூலின் Facebook Page
 and Sample Chapters      -     https://www.facebook.com/AalmanathinArputhasakthikal
Facebook Fan group Page   -    https://www.facebook.com/groups/nganeshanfans/
Publisher   -    http://blackholemedia.in/

                                                                                                                                                        

நூலைப்பற்றி நூலாசிரியர் திரு.என்.கணேசன் அவர்கள் தனது BLOG ல்..... 

அன்பார்ந்த வாசகர்களுக்கு,
வணக்கம்.
ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடர் எழுதப்பட்ட காலத்திலும் சரி எழுதி முடித்து இரண்டாண்டுகள் முடிந்து விட்ட இக்காலத்திலும் சரி வாசகர்களிடம் பெற்ற வரவேற்பு மகத்தானது.

இந்தத் தொடரின் பிற்பகுதி அத்தியாயங்களை நான் ஆழ்மன நிலைக்குச் சென்றே எழுதி இருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அந்த நிலை அமையும் வரை எழுதாமல் அது வரும் வரை காத்திருந்திருக்கிறேன். அதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். முடிக்கையில் ஒரு ஆத்ம       திருப்தியை உணர்ந்திருக்கிறேன்.

எழுதி முடித்து இரண்டாண்டுகள் கழிந்த பின்னும் பல வாசகர்கள் இதை அச்சு நூலாக வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்தார்கள். இணையப் பக்கங்களில் படிப்பதை விட ஒரு நூலாகப் படிக்கவும், தங்கள் இருப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பினார்கள். இந்தத் தொடர் ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டும் என்று விதி இருந்தால், அதற்கு உண்மையான தகுதி இது பெற்றிருந்தால், கண்டிப்பாக ஒரு நல்ல பதிப்பாளர் மூலம் நல்ல முறையில் வெளியிடப்படும் என்று விட்டிருந்தேன்.

எண்ணற்ற வாசகர்களின் எண்ணங்களின் வலிமையால் ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நல்ல தரத்தில் ஒரு அச்சு நூலாக இப்போது வெளியாகி உள்ளது. அந்த அன்பு வாசகர்களுக்கும், மனமுவந்து தானாகவே வெளியிட முன் வந்த ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பாளர் யாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆழ்மன சக்தி தொடரில் முடிவில் சொல்லி இருந்தேன்-

”உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள்.”

இப்போதும் அதையே சொல்கிறேன். இந்த நூல் ஆழ்மன சக்தி, அதீத சக்திகள் குறித்து உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்காகவே எழுதப்பட்டது. அவர்களுக்கு அத்துறையில் ஆர்வத்தை அதிகரிக்கவும், அந்தப் பாதையில் பயணிக்கவும், அனுபவங்கள் பெறவும் இது தொடர்ந்து வழி காட்டக்கூடிய நூல். இந்த நூல் ஒரு முறை படித்து முடித்து வைத்து விடக்கூடிய நூல் அல்ல. திரும்பத் திரும்பப் படிக்கவும், சிந்திக்கவும் தகுந்த நூல். எனவே ஆழ்மனசக்திகள் குறித்து ஆர்வமுள்ள, அந்தத் தேடல் உள்ள, அனைவரும் இந்த நூலை வாங்கிப் பயனடையும் படியும், இந்த நூலுக்கும் உங்கள் நல்லாதரவை அளிக்கும்படியும், வாசகர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

அன்புடன்
உங்கள்
என்.கணேசன்
                                                                                                                                                        

நூல் குறித்து தினமலர் (திருச்சி 30.01.2013) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

ஆழ்மனதின் அற்புத சக்திகள் பற்றி நமது பாரம்பரியப் பொக்கிஷமான பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் மற்றும் எகிப்து, திபெத்தின் பழங்கால நூல்களில் விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆறிவியலுக்கு சவால் விடும் இந்த அற்புத சக்திகள் பற்றி அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி என பல நாடுகளிலும் உள்ள ஆய்வு மையங்களிலும் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பல சோதனைகள் நடந்து வருகின்றன. இவை பற்றிய விரிவான தகவல்களை நூற்றுக்கணக்கான ஆதாரங்களுடன் அறிமுகப்படுத்தி சிலிர்ப்பூட்டுகிறது இந்த நூல்.
ஆகாய ஆவணங்களில் இருந்து தகவல்களைப் பெற்றவர், விபத்துகளை முன்கூட்டியே அறிவித்தவர், ஆழ்மன சக்தியால் நோய்களைத் தீர்த்தவர், இறந்தவர்களைன் குரலில் பேசியவர், மறுபிறவி தகவல்கள், ஆவிகளைத் தொடர்பு கொண்டவர்கள், செத்துப் பிழைத்தவர்களின் அதிசய அனுபவங்கள், எண்ணங்களின் அற்புதப் புகைப்படங்கள் போன்ற தகவல்களை விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் என்.கணேசன்.
வியப்பூட்டும் தகவல் தொகுப்பாக நூலை நிறுத்திவிடாமல், ஆழ்மன சக்தியை அடைய உதவும் மந்திர தியானம், சுக்ரா தியானம், விபாசனா தியானம், திபெத்திய தியானம் போன்ற தியானப் பயிற்சி முறைகளையும் இணைத்திருப்பது பாராட்டுக்குறியது.இந்த நூலை படிப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

துக்ளக்கில் ’ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ விமர்சனம் (26/6/2013)

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு.

இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த அற்புதங்கள். ஆழ்மன சக்தியில் ஓரளவு பரிச்சயம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், இது குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.

1960களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஜோசப் டிலூயிஸ் என்பவர், அங்கு நடந்த பல விபத்துக்களை முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சிகள். அற்புதங்களை நம்பாத ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினையே வியக்க வைத்த வாசிலிவ் என்பவரின் ஆழ்மன சக்திகள்.
ஆவியுலகத் தகவல்கள், மறுபிறவிநினைவுகள், ஆழ்மன சக்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஆல்ஃபா அலைகள், யோகா, தியானம் பற்றிய குறிப்புகளும் பயிற்சிகளும், நோய் தீர்க்கும் ஆழ்மன சக்திகள்.

உடலை விட்டு ஆத்மா எப்படி வெளியேறுகிறது, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பன போன்ற ஆய்வுகள், பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது போன்ற பல விஷயங்களை 60 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் திகிலும் திகைப்புமாக இருக்கிறது.
============================================================================
இந்த நூலை படிப்பவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.