Pages

Ads 468x60px

Tuesday, August 27, 2013

பயனுள்ள நூல்கள் - பகுதி 2

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

இன்றைய காலகட்டத்தில் வெளியாகும் நூல்களில், படிப்பதன் மூலம் படிப்பவரின் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நான் கருதும்படியான, படித்த, உணர்ந்த சில நூல்களை "பயனுள்ள நூல்கள்" என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.

நூலின் பெயர்   -     பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
நூலின் விலை  -     ரூ.100/-
நூலின் ஆசிரியர்    -  என்.கணேசன்
நூல் வாங்க தொடர்பு கொள்ள    -   9600123146
ஆசிரியரின் இணையதளம்  -   http://enganeshan.blogspot.in/
நூலின் Facebook Page
Facebook Fan group Page   -    https://www.facebook.com/groups/nganeshanfans/
Publisher   -    http://blackholemedia.in/



-------------------------------------------------------------------------------------------------------------------------
நூலைப்பற்றி நூலாசிரியர் என்.கணேசன் : 

எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம். மிகப் பழைமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மிகத் தேடல்களிலும் பண்டைக் காலம் முதலே சிறந்து விளங்கியது. இன்றும் எகிப்தின் ஸ்பிங்க்ஸ்”ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மிக ரகசியங்களைத் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்தச் செல்வங்களைச் சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மிக ரகசியங்கள் பிரமிடுகளில் இன்னும் ஏராளமாக உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. 
இந்நூலில் வரும் சம்பவங்களும், அனுபவங்களும் எழுத்தாளர் பால் ப்ரண்டனுடையதே என்றாலும், இது மொழி பெயர்ப்பு நூல் அல்ல. அவரது பயண அனுபவங்களில் சுவாரசியமானவற்றையும், தேவையானவற்றையும் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளேன். அதே போல சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் விளக்காமல் விட்ட சிலவற்றைத் 
தேவை கருதி நான் விளக்கியும் விவரித்தும் இருக்கிறேன்.
                                                                                                                                                      
நூல் குறித்து தினத்தந்தி (31.10.2012) செய்தித்தாளில் வந்த விமர்சனம்:

எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்து மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களை பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்களுடன் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன.மாலை நேரத்துக்குப்பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு நேரத்தில் பிரமிடுக்குள் தங்கினார். அங்கு கெட்ட ஆவிகளும், நல்ல ஆவிகளும் அலைந்து திரிவதை உணர்ந்தார். மேலும் பல அதிசய அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. இதுபற்றி என்.கணேசன் எழுதிய இந்த நூல், நமக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. படிக்க வேண்டிய புத்தகம்.
                                                                                                                                                      

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in , blackholemedia@gmail.com மின்னஞ்சல்கள் மூலமாகவோ, செல்பேசி: 9600123146, மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 
                                                                                                                                                          

0 comments:

Post a Comment